Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தானில் இருந்து கப்பலில் பல கோடி மதிப்பிலான போதைப்பொருள்


பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய ரூபாவின் மதிப்பின்படி சுமார் 600 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை இந்திய கடலோர காவல் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

“அல் ரசா” ( Al-Raza )என்ற கப்பல் மூலம் கடத்தப்பட்ட போதைப்பொருள் சரக்குகளுடன் 14 பணியாளர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இந்த போதைப்பொருள் கையிருப்பின் எடை சுமார் 86 கிலோ என்றும் இதன் மதிப்பு இந்திய ரூபாவின் மதிப்பின்படி 600 கோடி ரூபாய்க்கு மேல் என்றும் கடலோர காவல்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 14 ஊழியர்களும் பலுசிஸ்தானில் வசிப்பவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் குஜராத்தில் உள்ள போர்பந்தருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments