Ticker

6/recent/ticker-posts

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் புதிய வர்த்தமானி வெளியீடு!

 


வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் புதிய வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. இந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு தேவைப்படும் அத்தியாவசியமான சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, கல்வி அமைச்சுக்கு இரண்டு பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. சுகாதார அமைச்சுக்காக 21 டபிள் கெப் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும்.

நடமாடும் மகப்பேறு சிகிச்சை நிலையங்களுக்கு பயன்படுத்தப்படும் 3 வாகனங்களும், தொழில் அமைச்சுக்கு ஒரு வாகனமும் கொண்டுவரப்படவுள்ளன.

விமானத்திலிருந்து பயணிகள் இறங்குவதற்கு தேவையான 3 வாகனங்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இறக்குமதி செய்யும் என ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு மாத்திரமே வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மாத்திரமே அது தொடர்பான இறக்குமதி நடவடிக்கைகளை தனது சொந்தப் பணத்தில் மேற்கொள்ளும் என  தெரிவிக்கப்படுகிறது

Post a Comment

0 Comments