Ticker

6/recent/ticker-posts

எரிபொருள் குறித்து சிபெட்கோ விடுத்துள்ள அறிவிப்பு...!

 


சுமார் 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இன்றி மூடப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னுரிமைப் பதிவேடு அறிமுகம், காசோலை வசதிகள் கட்டுப்பாடு போன்றவற்றால் எந்த சுத்திகரிப்பு நிலையமும் மூடப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நாளாந்தம் சுமார் 4,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 3,000 மெற்றிக் தொன் பெற்றோல் விடுவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments