நெடுந்தீவில் கடற்பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரது சடலம் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த சடலம் இன்று (19) நாகப்பட்டினம் கடற்கரையோரத்தில் கரையொதுங்கியுள்ளதாகவும், அவர் அணிந்திருந்த ஆடைகளை வைத்து அடையாளம் கண்டுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
நெடுந்தீவு திருலிங்கபுரத்தை நிரந்தர முகவரியாகவும், நெடுந்தீவு தாளைத்துறையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட 41 வயதுடைய ஜேசுதாசன் ஆரோக்கிய அன்ரனீஸ் (சதீஸ்) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே கடந்த 11/06/2026 இல் நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்
இந்நிலையில் இன்றையதினம் அவரது சடலமாக தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
உரிய விசாரணைகளின் பின்னர் அவரது சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments