வாரியபொல-கப்புத்தோட்ட வீதியில் நெலும்கனுவ-கொலமுனுவோய பாலத்தில், லொரி கவிழ்ந்ததில் அதில் பயணித்த ஓட்டுநரும் அவரது உதவியாளரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸா தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (12) அதிகாலை நிகழ்ந்ததாக கட்டுப்போட்ட பொலிஸார் கூறுகின்றனர். உயிரிழந்தவர்கள் மிரிகமவில் உள்ள பல்லேவெல பகுதியைச் சேர்ந்த இருவர் ஆவர். உயிரிழந்த இருவருக்கும் முறையே 63 மற்றும் 42 வயது என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனமடுவ பகுதியிலிருந்து மீரிகம பகுதிக்கு செங்கற்கள் ஏற்றப்பட்ட லொரி சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்
0 Comments