கனடாவின் ஏஜாக்ஸ் நகரில், இலங்கை இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நள்ளிரவில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சஞ்சுல பெரேரா எனத் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே, சந்தேகத்திற்குரிய இருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குறித்த அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.

0 Comments