Ticker

6/recent/ticker-posts

ஈரானியர்களின் சடலங்கள் ஈரானுக்கு அனுப்பப்பட்டன


 இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான 'IRIS DENA' கப்பலில் பலியான 84 ஈரானியர்களின் சடலங்கள் விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மத்தள விமான நிலையத்திலிருந்து நேற்று (13) இரவு 09.29 மணியளவில் இந்த விமானம் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

கடந்த மார்ச் மாதம் 04ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் இந்த ஈரான் கப்பல் விபத்துக்குள்ளானதுடன், அதில் சுமார் 180 பேர் இருந்தமை கண்டறியப்பட்டது. 

பின்னர் இதிலிருந்து மீட்கப்பட்ட 35 பேர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments