[காலி - பொத்தல] இலங்கையின் அமைதியான சுற்றுலாப் பிரதேசமான காலியில், திரைமறைவில் இயங்கி வந்த பாரிய சர்வதேச இணையப் பணமோசடி (Online Scam) கும்பலை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்!
💻 என்ன நடந்தது?
நேற்று மாலை, பொத்தல பொலிஸ் பிரிவின் கொடகந்த பகுதியில் உள்ள ஒரு சொகுசு வீட்டை முற்றுகையிட்ட காலி மாவட்ட பொலிஸார் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், அங்கு தங்கியிருந்த 15 சீன நாட்டவர்களையும் 06 வியட்நாம் நாட்டவர்களையும் (மொத்தம் 21 பேர்) மடக்கிப் பிடித்தனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவார்!
📱 கைப்பற்றப்பட்ட "டிஜிட்டல்" ஆயுதங்கள் -
வெறும் கத்திகளோ, துப்பாக்கிகளோ இன்றி மின்னணு சாதனங்களை வைத்தே இவர்கள் கோடிக்கணக்கான மோசடியில் ஈடுபட்டுள்ளனர் .
☠️84 ஸ்மார்ட்போன்கள் (ஒரே நேரத்தில் பலரைத் தொடர்பு கொள்ள!)
☠️09 நவீன மடிக்கணினிகள் (Laptops)
☠️05 கணினிகள் (Desktops)
🔍 மோசடி வலை - எப்படி சிக்க வைத்தார்கள்?
சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வந்து, ஆடம்பர வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் இந்தக் கும்பல், Crypto முதலீடு, போலி வேலைவாய்ப்பு மற்றும் காதல் ஆசை (Romance Scam) காட்டி வெளிநாட்டவர்களின் பணத்தைச் சூறையாடி வந்துள்ளனர்.
⚠️ பொலிஸார் எச்சரிக்கை..
இலங்கையில் தற்போது இது போன்ற வெளிநாட்டவர்கள் தங்கியிருந்து சைபர் குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. எனவே, வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விடுவோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

0 Comments