காசாவைப் போல் ஈரானிலும் அமேரிக்கா, இஸ்ரேல் பொதுமக்களையும், குழைந்தைகளையும் குறிவைத்து படுகொலையை ஆரம்பித்துள்ளது முதல் கட்டமாக அடுக்குமாடி குடியிருப்புக்களை தாக்கி அழிப்பதனால் அதிகமான கொல்லப்படுவார்கள் என்று இஸ்ரேல் அமேரிக்கா நினைப்பதனால் அடுக்குமாடிகளை குறிவைத்து தாக்கி வருகிறது இந்த செயல்முறையைதான் காசாவலயும் இஸ்ரேல் அமேரிக்கா செய்து வந்தது
அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்களை ஈரான் செஞ்சிலுவை சங்கம் புதுப்பித்துள்ளது.
இந்த தாக்குதல்களால் 787 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 176 பேர் சிறுவர்கள் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்திய தாக்குதல்களால் நாடு முழுவதும் குறைந்தது 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இலக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை 504 என குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிவான தாக்குதல்களின் எண்ணிக்கை 1,039 ஆக அதிகரித்துள்ளது.
மீட்புப் பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், இடிபாடுகளை அகற்றுதல், காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு மாற்றுதல் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments