அவுஸ்திரேலியாவில் தமது குடும்பத்தைக் காப்பாற்ற 4 மணி நேரம் இடைவிடாமல் கடலில் நீந்திய சிறுவனின் தைரியத்தைப் பார்த்துப் பலர் வியப்படைந்துள்ளனர்.
மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள சுற்றுலா நகரான குவிண்டலப்பில் நடந்தது அந்த அதிசயம்.
13 வயதுச் சிறுவன், அவருடைய தாய், இரண்டு இளைய சகோதரர்கள் ஆகியோர் கடலில் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதைப் பார்த்த சிறுவன் கிட்டத்தட்ட 4 கிலோமீட்டரை 4 மணி நேரத்தில் நீந்தி உதவி கேட்கச் சென்றார்.
அதில் முதல் இரண்டு மணி நேரம் அவர் உயிர்க்காப்பு உடையை அணிந்தவாறே நீச்சல் அடித்தார்.
அது தம்மை மெதுவடையச் செய்வதாக உணர்ந்த சிறுவன், அதைக் கழற்றிவிட்டு இரண்டு மணி நேரம் நீந்தினார்.
சிறுவனின் மனவுறுதியும் தைரியமும் மூன்று உயிரையும் காப்பாற்றிக் கொடுத்தன.

0 Comments