Ticker

6/recent/ticker-posts

இஸ்லாமாபாத் நீதிமன்றுக்கு வெளியே குண்டுவெடிப்பு: 12 பேர் பலி


பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் செவ்வாய்க்கிழமை (11) அன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்

நகரின் உயர் நீதிமன்றத்திற்கு அருகில் நடந்த குண்டு வெடிப்பு தற்கொலை தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

உயர் அரசு அலுவலகங்கள் நிறைந்த மாவட்டத்தில் உள்ள நகரத்தின் பரபரப்பான நீதித்துறை வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது.

தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் இது ஆப்கானிஸ்தான் தாலிபான் மற்றும் இந்தியாவுடன் தொடர்புடைய போராளிகளால் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

வடமேற்கு பாகிஸ்தானில் ஒரு கேடட் கல்லூரியை தீவிரவாதிகள் தாக்கிய ஒரு நாளுக்குள் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

Post a Comment

0 Comments