Ticker

6/recent/ticker-posts

கல்முனை அல்-அஸ்ஹர் கல்லூரிகளின் மாணவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு இன்று சென்றிருந்தனர்

 


கல்முனை அல்-அஸ்ஹர் கல்லூரிகளின் மாணவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு இன்று  சென்றிருந்தனர்  ஜனாதிபதி அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும்  ‘Vision’' நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.



ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற மக்கள் தொடர்பாடல் பிரிவு ஆகியவை இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன.


 ‘Vision’  திட்டம் மற்றும் அதன் எண்ணக்கரு ரீதியான மதிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், பாடசாலைகளுக்கு அடையாளப் பரிசாக பெறுமதியான மரக்கன்றுகள் வழங்கப்பட்டதோடு  ‘Vision’  சஞ்சிகையும் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments