Ticker

6/recent/ticker-posts

அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்தது i


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான திருமதி அயோனா விமலரத்ன, கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.


கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாம்பிட்டியில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினரை எதிரியாக குறிப்பிட்டு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த போதே நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்.


இதற்கு முன்னரும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும் நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.உறுப்பினர் சார்பில் சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.


அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடத்திற்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கற்பிட்டி பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments