Ticker

6/recent/ticker-posts

களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற அனர்த்த ஒத்திகை நிகழ்வு

 


நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் உள்ளிட்ட அனர்த்த ஒன்று இடம்பெற்றால் அதனை வைத்தியசாலை எவ்வாறு முகாமை செய்து கொள்வது என்பது தொடர்பான அனர்த்த முகாமைத்துவ தத்ரூப ஒத்திகை முன்னோட்ட நிகழ்வு இன்று (20.07.2024) களுவாஞ்சிகுடி ஆதர வைத்தியசாலையின் ஏற்பாட்டடில் இடம்பெற்றது.

அனத்தம் ஒன்று இடம்பெற்றால் அந்த அனத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள், காயமுற்றவர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டடோர் வைத்தியசாலையில் எவ்வாறு முகாமை செய்து நடாத்தப்பட வேண்டும் என்ற ஒத்தியையே இதன்போது இடம்பெற்றது.

களுவாஞ்சிகுடி நெடுஞ்சாலையில் தத்தூரூபமாக ஏற்படுத்தப்பட்ட விபத்தில் எவ்வாறு காயப்பட்டவர்களை மீட்பது, நோய்காவு வண்டியில் எவ்வாறு கொண்டு செல்வது, வைத்தியசாலையில் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பது, பதிவுகளை மேற்கொள்ளவது, உள்ளிட்ட பல விடையங்கள் இதன்போது ஒத்திகை பார்க்கப்பட்டன.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை


அனர்த்தம் இடம்பெற்ற இடத்தில் இருந்து களுவாஞ்சிகுடி ஆதர வைத்தியசாலைக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.

உடன் வைத்தியசாலை நிருவாகம் நோயாளர்களைப் பொறுப்பேற்பதற்குத் தயாராகி அனர்த்தம் இடம்பெற்ற இடத்திற்கு நோய்காவு வண்டிகள் அனுப்பப்பட்டு நோயாளர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு வந்து சிகிச்சையளிக்கப்பட்டனர்.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் க.புவனேந்திரநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலையின் அனத்த பாதுகாப்பு பிரிவினர், பொதுமக்கள், களுவாஞ்சிக்குடி போக்குவரத்துப் பொலிஸார், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment

0 Comments