கம்பளை - ஏத்கால்ல உலப்பனை தோட்டத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை அவரது மருமகளே கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உலப்பனை தோட்டத்தை சேர்ந்த 78 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 32 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏத்கால்ல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 Comments