Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதித் தேர்தலை உரிய நாளில் நடத்துங்கள் - எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை


அரசியலமைப்பு சதிகளின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலுக்கு ஏற்படுத்தப்படும் அழுத்தங்களை தடுக்குமாறு கோரியும் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரஞ்சித் மத்தும பண்டார, ரவூப் ஹக்கீம், உதய கம்மன்பில, அத்துரலிய ரத்தன தேரர் உள்ளிட்ட 30 பேரின் கையொப்பங்களுடன் இந்தக் கடிதம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக தோல்வியடையக்கூடும் என்ற அச்சத்திலுள்ள அரசாங்கம் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை பல்வேறு உத்திகளை கொண்டு ஒத்திவைக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.

அரசியலமைப்பில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 ஆண்டுகள் என தௌிவாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் உயர்நீதிமன்றத்தினால் 03 சந்தர்ப்பங்களில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சியின கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, சாத்தியமான முதல்நாளில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் தேர்தலை சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் நடத்துவதற்கு அதிகபட்ச சட்ட அதிகாரத்தை பயன்படுத்துமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எதிர்க்கட்சிகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

Post a Comment

0 Comments