Ticker

6/recent/ticker-posts

மனைவியுடன் முரண்பட்டு, கோபத்தில் வீட்டு ஜன்னலை உடைத்த நபர், காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு


இரத்த வெள்ளத்தில் கிடந்த குடும்பஸ்தர்.

கரடியனாறு பொலிஸ்பிரிவு, மாவடிச்சேனையில் சம்பவம்.
( ஏறாவூர் நஸீர் -ISD)


மது போதைக்கு அடிமையான சுந்தரலிங்கம் நிமல செல்வம் (28) என்பவர், தனது மனைவியுடன் முரண்பட்டு தாக்க முயற்சிக்கையில் வீட்டிலிருந்து மனைவி வெளியாகியபோது , கோபமடைந்த இவர், வீட்டின் கண்ணாடியினாலான யன்னலை வலது கையினால் ஓங்கி குத்தியபோது முழங்கைக்கும் புஜத்துக்கும் இடையிலான தசைப்பகுதியின் நாடி நரம்பு அறுந்து விரைவாக குருதி வெளியேறி சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார்.


ஒரு குழந்தையின் தந்தையான இவர் போதைக்கு அடிமையாகி மனைவியுடன் முரண்படும் விடயமாக பல தடவைகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 


சம்பவத்தை அறிந்த கரடியனாறு பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று முறைப்பாட்டினை பதிவு செய்ததுடன், பிரதேச மரண விசாரணை அதிகாரி MSM. நஸீர், பொலிஸ் பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை ஏற்று மரண விசாரணைகளை தொடர்ந்தார்.


சம்பவம் இடம்பெற்ற அறை முழுவதும் இரத்த வெள்ளமாகவே காட்சியளித்தது.


பின்னர் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை முடிவுற்றதும் சடலத்தை உவினர்களிடம் ஒப்படைத்தனர்.


அதிக குருதி வெளியேற்றமே மரணத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டிருந்தது.


மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் தொடர்கின்றனர்

Post a Comment

0 Comments