Ticker

6/recent/ticker-posts

VIDEO > பட்டப்பகலில் நகைக்கடையில் துணிகர கொள்ளை - துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி அடாவடி


ஹோமாகம நகரில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த இனந்தெரியாத இருவர், நிறுவனத்தில் இருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


இன்று (10) முற்பகல் 11.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேரில் இருவர் கடைக்குள் நுழைந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.


இருவரும் தங்கம் வாங்குவது என்ற போர்வையில் சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டு, அவர்களில் ஒருவர் கடைக்காரர்களை நோக்கி கைத்துப்பாக்கியை காட்டி தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளார்.


3 லட்சம் ரூபாய் பணம் , 
36 மோதிரங்கள், 
48 பென்டன் ஆகியவற்றை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதாக நகைக்கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.


கொள்ளையர்கள் சென்ற பின், கடையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.


கொள்ளையர்கள் எடுத்துச் சென்ற தங்க மோதிரங்கள் மற்றும் பென்டன்கள் சாலையில் கிடப்பதையும், அவ்வழியாக சென்றவர்கள் அவற்றை கடைக்கு கொண்டு வந்த விதமும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.


ஹோமாகம காவற்துறையினர் உடனடியாக அங்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்ததில் கொள்ளையர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகள் போலியானது என தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments