Ticker

6/recent/ticker-posts

VIDEO > கேமரா, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களுடன் எனது கைப்பை புறக்கோட்டை பஸ் ஒன்றினுள் திருடப்பட்டு விட்டது - திருடனை பற்றி விபரம் தந்தால் 5000 டாலர் சன்மானம் தருகிறேன்.


புறக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து எல்ல பிரதேசத்தை பார்வையிடுவதற்காக பஸ்ஸில் ஏறிய வெளிநாட்டு யுவதியொருவரின் கைப்பை பஸ்ஸுக்குள் வைத்து திருடப்பட்டுள்ளது.

Youtube சேனலை நடத்தும் இந்த யுவதி இலங்கை தொடர்பான பயண காணொளி ஒன்றை தயாரிப்பதற்காக இங்கு வந்திருந்தார்.

ஸ்கை மகோவன் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு பெண், அவர் டிராவல் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.


அவர் சுமார் 37 நாடுகளுக்கு விஜயம் செய்து இரண்டாவது முறையாக மே 24 அன்று இலங்கைக்கு வந்துள்ளார்.

ரயிலில் எல்லக்கு செல்வதற்காக கோட்டை புகையிரத நிலையத்திற்கு சென்றிருந்த போதிலும், மோசமான வானிலை காரணமாக புகையிரதம் இரத்துச் செய்யப்பட்டதால், பஸ்தியான் மாவத்தை பஸ் நிலையத்தில் இருந்து பஸ்ஸில் எல்லக்கு செல்வதற்காக பஸ்ஸில் ஏறியுள்ளார்.

ஆனால், பேருந்தில் இருந்த அவரது பையை இரண்டு பேர் திருடிச் சென்றது பேருந்தின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தனது பை திருடப்பட்டதை அறிந்தவுடன் பஸ் நிலையத்தில் இருந்த பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததோடு, கோட்டை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

பையில் தனது விமான டிக்கெட், கேமரா, லேப்டாப் மற்றும் $2,000 பணம் இருந்ததாக ஸ்கை மகோவன் கூறுகிறார்.

தனது பையைக் கண்டுபிடித்து அல்லது அதைப் பற்றிய தகவல்களை வழங்கும் எவருக்கும் $5,000 செலுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

"இலங்கை மக்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பதைக் காட்டி எனக்கு உதவுங்கள். இவர்களின் பெயர் மற்றும் வசிப்பிட முகவரியைக் கொண்டு அடையாளம் காட்டினால் நன்றாக இருக்கும். இதைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு $5,000 தருவோம்."

Post a Comment

0 Comments