குறித்த விபத்தில் காயமடைந்த ஹலாலல்தீன் ஹாஜியாரின் பிள்ளைகள் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்காக ஹலால்தீன் ஹாஜியாரது மனைவி மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்திற்கான காரணம் கார் வீதியை விட்டு விலகியே கார் குடைசாய்ந்து குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த விபத்து நடைபெற்ற இடத்திற்கு மேலதிக உதவிக்காக ஓட்டமாவடி அகீல் எமெர்ஜென்ஷி வாகனம் சென்றுள்ளதுடன், வாகனத்தை மீட்கும் பணிகளும் நடைபெறுகிறது.
ஹலால்தீன் ஹாஜியார் எனும் இவர் அண்மைக்காலமாக கல்குடாவில் சமூகப் பணிகளில் ஈடு பட்டு தன்னாலான பல உதவிகளையும் செய்துவந்துள்ள ஒருவர்.
அன்மையில் மீராவோடை மீராஜூம்மா பள்ளிவாயல் மேல்மாடி கட்டுவதற்கான நிதியையும் சேகரித்துக் கொடுத்துள்ளார்.
விபத்தில் சிக்கிய குறித்த ஹலால்தீன் ஹாஜியாரும் அவரது குடும்பத்தாரும் மீண்டும் நலமுடன் திரும்ப பிரார்த்தனை செய்யுங்கள்.
தகவகல்: பெளசுல் ஹமீட், அகீல் எமெர்ஜென்சி.
0 Comments