Ticker

6/recent/ticker-posts

BREAKING: கும்புக்கந்துரையிலிருந்து விக்டோரியா டேமில் குளிக்க சென்ற கணவன் மனைவி மரணம் - உடல்களை தேடச் சென்றவரும் உயிரிழப்பு - ஜனாஸாக்களை மீட்க்கும் பணி தொடர்கிறது.


விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய கணவன் மனைவி மற்றும் காப்பாற்ற சென்றவரின் உடல்களை மீட்க்கும் பணி தொடர்கிறது. 

திஹாரிய பிரதேசத்தில் வசிக்கும் கணவன் மனைவி இருவரும் தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள பெண்ணின் கிராமத்திற்கு சென்ற போது கும்புக்கந்துர பிரதேசத்தில் இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். 

இந்நிலையிலேயே குறித்த கவலைக்குறிய நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

மனைவி தவறி விழுந்த நிலையில் அவரைக் காப்பாற்ற சென்ற கணவரும் நீரிழ் மூழ்கியுள்ளதாகவும், இருவரின் சடலத்தையும் நீரிழ் மூழ்கி தேடச் சென்ற சகோதரரும் உயிழிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த பெண்ணின் ஜனாஸாவும், கணவன் மனைவியை காப்பாற்ற சென்ற சகோதரரின் உடலும் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், காணாமல்போன கணவரின் உடலை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணுக்கு 22 வயது எனவும் காணாமல்போன கணவருக்கு 28 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த அசம்பாவிதம் பிரதேசவாசிகள் மத்தியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments