குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மரக்கறி லொறி ஒன்றுடன் எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல் பொத்துஹெர, பூலோகொல்ல சந்திக்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொத்துஹெர பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments