Ticker

6/recent/ticker-posts

மருதமுனையில் இடம்பெற்ற கொலை சம்பவம் இதை கேட்க நமக்கெங்கு நேரமிருக்கிறது.............

 


மற்றவனின் கவலையை கேட்க நமக்கெங்கு நேரமிருக்கிறது.............


#இது விதியா?

#எழுதப்பட்டதா?

இரு கேள்விகளுக்குள்ளும் நாம் சிறைப்பட்டிருக்கின்ற போதும் மருதமுனையில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தை ஏனோ மனதினால் ஜீரணிக்க முடியவில்லை.














செய்திப் பத்திரிகைகளிலும்,இணையங்களிலும்,தொலைக் காட்சிகளிலும் இதுவரை செய்திகளாக பார்த்த எம் ஊரவர்களுக்கு இன்று காலடியில் நடந்துள்ள இரட்டைக் கொலைச் சம்பவம் பல படிப்பினைகளை கொடுக்க வேண்டும்.


கொலைச் சம்பவம் பற்றி தெரியவருவது,


தனது இரு வலது குறைந்த பிள்ளைகளையும் பராமரித்து வந்த மனைவி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வபாத்தாகியிருந்தார்.மனைவியது இழப்பு ஈமானியம் இல்லாத மனிதனை வெகுவாகவே பாதித்திருந்தது.


வாழும் போது இஸ்லாமிய வழிமுறைகளை ஓர் அளவேனும் நடைமுறையில் பின்பற்றியிருந்தால்,


சூழ் நிலை கைதியாக மாறி தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்ய முனைந்தவர ஒரு கணமேனும் சிந்தித்திருப்பார்.


வலது குறைந்த இரு பிள்ளைகளையும் தன்னால் இதற்கு மேல் பராமரிக்க முடியாதென தனது பிள்ளைகளை கொலை செய்தாரோ?


மனைவியின் மரணத்திற்கு பின்னர் தனது இரு பிள்ளைகளையும் ஹியூமன் லிங்க் பாடசாலை செல்வதையும் நிறுத்தி விட்டார்.

மனைவியின் மரணத்திற்கு பின்னர் தனது இரு வலது குறைந்த பிள்ளைகளையும் பராமரிக்க முடியாமல்,உதவி ஒத்தாசைகளின்றி சிரமப்பட்டு வந்தவருக்கு ஆறுதல் கூறவும் ஆள் இல்லை என்பது முதற்கட்ட விசாரணை


நாங்கள் உறவுகளானாலும் வாழ்க்கையில் எங்களுக்கு அவ்வளவு பிசி,


ஒரு மனிதனுக்கு ஆறுதல் வார்த்தை கூறி அரவணைக்க கூட எங்களுக்கு நேரமில்லை,


வலது குறைந்த பிள்ளைகள் பராமரிப்பது அவ்வளவு சுலபமும் இல்லை.அந்த கஷ்டங்களை பராமரித்தவனே அறிவான்.


இருந்தும் கொலை என்பதும் தீர்வல்ல.அதற்கென இப்போது நிறைய வழிகளும் ஊரில் ஹியூமன் லிங்க் என்ற நிறுவனமும் உண்டு


அத்தனையையும் தாண்டி தன் பிள்ளைகளை தன் கையால் கொலை செய்வதற்கு அவரிடம் நிச்சயம் சுய புத்தியும்,நிதானமும் இருந்திருக்க போவதில்லை.

இரட்டைக் கொலை யார் செய்த குற்றம்?

#தந்தையா?

#உறவினர்களா?

#சமூகமா?

#பாடசாலை வராதவர்களை சென்று கூட்டி வர தவறி ஹியூமன் லிங்கா

#அயலவர்களா?

#மார்க்த்தை புரிய வைக்க முடியாத உலமாக்களா?

#மொத்த ஊருமா?

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


சுவனத்து சிட்டுக்களின் மாண்பறியாத கொடூரத் தந்தையவன் என்பதை தவிர வேறு வார்த்தையில்லை

அம்பாரை மாவட்டம் - மருதமுனையில் அதிர்ச்சி சம்பவம் 

முழு விபரம் …………….

29, 15 வயதுப்பிள்ளைகள் கறுத்தறுத்துக்கொலை : தந்தை தற்கொலை முயற்சி 

பாறுக் ஷிஹான்

இரு பிள்ளைகளை கழுத்தறுத்துக்கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தை தொடர்பிலான செய்தி அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் நிலையப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினமான இன்று (14) காலை பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியிலுள்ள வீட்டில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலம் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டது.

அத்துடன், தனது மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளைக்கொன்று தற்கொலையில் ஈடுபட்ட தந்தையும் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் முஹம்மது மிர்சா முகமது கலீல் (வயது-63) தற்போது காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ் (வயது-29), முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (வயது-15) ஆகியோர் சம்பவ இடத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தவர்களாவர்.

குறித்த  மரணமடைந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்ததாக மேலதிக விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments