2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை உண்மையில் யார்நடத்தினார்கள் என்பது தனக்குத் தெரியும் என்றும், அந்தத் தகவலை நீதித்துறைக்கு வெளியிடத் தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இன்று கண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஜனாதிபதி, இது தொடர்பாக நீதிமன்றம் கோரிக்கை விடுத்தாலோ அல்லது உத்தரவிட்டாலோ, தகவல் தெரியவரும் என்றார்.
ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரியை இதுவரை யாரும் வெளிப்படுத்தவில்லை என்று கூறிய சிறிசேன, விவரங்களை வெளியிடத் தயாராக இருப்பதாகக் கூறினார்,
ஆனால் தகவலைக் கண்டிப்பாக ரகசியமாக வைத்திருப்பது நீதிபதிகளின் பொறுப்பாகும் என மேலும் தெரிவித்தார்.
0 Comments