Ticker

6/recent/ticker-posts

மாண்டஸ் சூறாவளியால் 30 படகுகள் குருநகரில் சேதம்



மாண்டஸ் சூறாவளி காரணமாக தமது 30 படகுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். குருநகர் மீனவர்கள் தெரிவித்துள்னர். 

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால், கடல் அலைகளின் தாக்கம் காரணமாக குருநகர் மீனவர்களின் 30க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளன. ஒரு படகு முற்றாக கடலில் மூழ்கியுள்ளது.

படகுகள் சேதமடைந்துள்ளமையால், மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

சேமடைந்த படகுகளை திருத்துவதற்கு பொருளாதார வசதி இல்லை; எனவே அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென அந்த மீனவர்கள் கோரியுள்ளனர். 


Post a Comment

0 Comments