Ticker

6/recent/ticker-posts

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை தேசியமட்டத்திற்கு தெரிவு


 மாகாணமட்ட உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டியில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை (தேசிய பாடசாலை) இரண்டாம் இடத்தைப் பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டது.

மாகாணமட்டத்தில் நடைபெற்ற 20 வயது பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டிகள் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் இன்று (2022.09.12) திங்கள் கிழமை நடைபெற்றது.

இதில் பங்குபற்றிய கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை (தேசிய பாடசாலை) அணியினர் இரண்டாம் இடத்தைப் பெற்று அகில இலங்கை தேசியமட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் திரு எஸ். கலையரசன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
படத்தில் வெற்றியிற்றிய மாணவர்களும் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களையும் காணலாம்.

Post a Comment

0 Comments