Ticker

6/recent/ticker-posts

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அறிக்கை - முழுமையான தொகுப்பு…


 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியைஇராஜினாமா செய்துள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.


அந்த குறுகிய காலத்தில் ஜனாதிபதியாக தற்காலிகமாக செயற்படும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த குறுகிய காலத்தில் சில அவசர நடவடிக்கைகளை எடுப்பேன் என்று நம்புகிறேன்.

அரசியல் அமைப்பில் மாற்றத்தை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதே இந்த மாற்றத்திற்கான முக்கியமான காரணியாகும். எனவே, 19ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்குத் தேவையான வரைபுகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் வேலைத்திட்டத்தை நான் ஆரம்பித்துள்ளேன்.

நாட்டில் சட்டம் ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டுவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் மற்றவர்கள் இப்போது இந்த போராட்டங்களை நாசப்படுத்த முயற்சிக்கின்றனர். அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செல்வாக்கு செலுத்துவதற்கு வெளி குழுக்கள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்.பி.க்கள் தங்கள் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் சூழலை உருவாக்க வேண்டும். அவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். பாராளுமன்றத்தில் ஜனநாயகத்தை அழிக்க எந்த ஒரு குழுவையும் அனுமதிக்க மாட்டோம்.

மேலும், ஜனநாயகத்தை நசுக்கி பாசிச முறைகள் மூலம் நாட்டை தீக்கிரையாக்க முயற்சிக்கும் குழுக்கள் உள்ளன. பாராளுமன்றத்திற்கு அருகில் பாதுகாப்புப் படையினருக்கு சொந்தமான இரண்டு ஆயுதங்களும் தோட்டாக்களும் அத்தகைய நபர்களால் திருடப்பட்டுள்ளன.

இருபத்தி நான்கு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர், அவர்களில் இருவர் இன்று பலத்த காயமடைந்துள்ளனர். உண்மையான போராளிகள் இவ்வாறான செயல்களை செய்வதில்லை என்பது எனது நம்பிக்கை. கிளர்ச்சியாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. இந்த நாசகார செயல்களுக்கு ஆரம்பம் முதலே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

அவர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு மூலம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஜனநாயகத்தை நிலைநாட்ட கடமைப்பட்டுள்ளோம்.

அரசியலமைப்பை பாதுகாக்க நான் கடமைப்பட்டுள்ளேன். நமது நாட்டில் அரசியலமைப்புக்கு முரணான எதையும் நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். நான் அரசியலமைப்பிற்கு புறம்பாக வேலை செய்யவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் அது நமது பொருளாதாரத்தை பாதிக்கும்.

எரிபொருளைப் போலவே, நமது மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் மற்றும் நமது உணவு விநியோகம் தடைபடலாம். இந்த ஆபத்தான நிலையை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக பாதுகாப்புப் படைகளின் பிரதானி, பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைத் தளபதிகள் அடங்கிய விசேட குழுவொன்றை நியமித்துள்ளேன். எந்தவித அரசியல் தலையீடும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்துக் கட்சி ஆட்சி அமைப்பது தொடர்பான அரசின் நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளோம். அதற்கான பொதுவான உடன்பாட்டை உடனடியாக எட்டுமாறு பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறேன். இந்த அரசியல் கட்சிகள் தங்கள் கருத்து வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டு நலனுக்காக ஒன்றுபட வேண்டும்.

எனவே உங்கள் தனிப்பட்ட லட்சியங்களை ஒதுக்கி வைக்கவும். நாட்டின் தேவைக்கு முதலிடம் கொடுங்கள்.

தனி நபர்களை பாதுகாப்பதை விட நாட்டை பாதுகாப்பது பற்றி சிந்தியுங்கள். வாழவும் அரசியல் செய்யவும் ஒரு நாடு வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் குழுக்களும் நமது நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும், அவர்கள் செயல்படும்போது நாட்டு மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். முதலில் இந்த நெருக்கடியில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவோம். அப்போது கட்சி அரசியலுக்கு திரும்பலாம்.

செயல் தலைவர் என்ற முறையில் மேலும் இரண்டு முடிவுகளை எடுப்பேன். ஜனாதிபதியை அறிமுகம் செய்ய “His Excellency” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அதிகாரப்பூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஜனாதிபதியின் கொடியும் ஒழிக்கப்படும்.

ஒரு நாட்டில் ஒரே கொடி இருக்க வேண்டும். தேசியக் கொடி மட்டுமே. ஒரு கொடியின் நிழலின் கீழ் ஒருவர் முன்னேற வேண்டும்.

இன்று நாம் எதிர்கொள்ளும் இந்த நிலைமையை ஆழ்ந்து சிந்தித்து தியானியுங்கள். இப்போது முழு நாட்டிற்கும் வித்தியாசமான அணுகுமுறையுடன் ஒரு புதிய பயணத்திற்கான பின்னணி அமைக்கப்பட்டுள்ளது. ஊழல் இல்லாத அமைதியான, வளமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

நமது தாய்நாட்டை உயர்த்துவதற்கான நோக்கம் விரிவடைந்துள்ளது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

ஒரு புதிய சகாப்தத்தையும் புதிய அமைப்பையும் தொடங்க நாம் அனைவரும் முழு பலத்தையும் முழு ஆதரவையும் வழங்குவோம்.

இறுதியாக, இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, மே 13 அன்று, நான் நாட்டுக்காக ஒரு தீவிரமான முடிவை எடுத்தேன். இந்த நாட்டின் இருபது இலட்சம் மக்களைப் பற்றி நினைத்துத்தான் அந்தத் தீவிரமான முடிவை எடுத்தேன். Pqrliament புதிய ஜனாதிபதியை நியமிக்கும் வரை, அந்த முடிவு நாட்டுக்காக மேற்கொள்ளப்படும். அந்த முடிவை நிறைவேற்றுவதற்கு நான் அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவன்.

ஜூலை 15, 2022
பிரதமரின் ஊடகப் பிரிவு

Post a Comment

0 Comments