Ticker

6/recent/ticker-posts

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு உயிரிழப்பு



அம்பாறை பொத்துவிலில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த சமுர்த்திஉத்தியோகத்தர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.


இன்று (23) காலை 11 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொத்துவில்பொலிசார் தெரிவித்தனர்


பொத்துவில் லகுகலையைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் 51 வயதுடைய திசாநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


பொத்துவில் கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னாள் பெற்றோலைபெறுவதற்காக சம்பவ தினமான இன்று காலையில் இருந்து காத்திருந்த ஒருவர் திடீரெனமயக்கமுற்று கீழே வீழ்ந்து மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்குறித்த நபர் ஏற்கனவேஇருதய சத்திர சிகிச்சை மோற்கொண்டவர் எனவும் சடலம் பிரேத பரிசோதனைக்காகபொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாகபொலிசார் தெரிவித்தனர் இது தொடர்பான மேலதிக விசாரணைகழள பொத்துவில்பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

➖➖➖➖➖➖➖➖➖

இது போன்ற உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி மற்றும் விசேட செய்திகளைஉடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்👇*

----------------------------------

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments