இலங்கையில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியை தொடர்ந்து தான் எதிர்வரும் 13ம் திகதி பதவி விலகுவதாக அறிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அதனை இன்று காலை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது பதவி விலகலை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி கோட்டா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மக்கள் எழுச்சியை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தற்போது எங்கிருக்கிறார் என்பது சரியாக தெரியாத நிலையில் அவர் கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள கப்பலில் இருப்பதாக லண்டன் BBC சர்வதேச ஆங்கில செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் பிரபல செய்திப் பிரிவான நியுஸ் பெஸ்ட் ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகன தொடரணி கடற்படை தளத்தை நோக்கிச் செல்லும் காட்சிகளும் அங்கு தயார் நிலையில் இருந்த கப்பலில் ஜனாதிபதி வாகனத் தொடரணியில் இருந்து உடைமைகள் ஏற்றிச் செல்லும் காட்சிகளும் பதிவானதாகக் கூறி ஏற்க்கனவே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அதனை பிபிசி தமிழ் இணையதளமும் மேற்கோள் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தப் பின்னனியில் தற்பொது பிபிசி ஆங்கில செய்தித் தளம் ஜனாதிபதி கோட்டா கப்பலில் இருப்பதாக தமக்கு செய்தி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
0 Comments