Ticker

6/recent/ticker-posts

80 பயணிகளுடன் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி இருவர் பலி, சிலர் காயம்: பஸ் வண்டிக்கு தீ வைப்பு!


 புஸல்லாவை, காச்சாமலை வீடன் பகுதியில் இன்று (11) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் பஸ்ஸையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.


புஸ்ஸலாவ, பெரட்டாசி தோட்டத்திலிருந்து, புஸ்ஸலாவை நகரத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் வீடன் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதன்போது மிதிபலகையில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்.



இவ்வாறு உயிரிழந்தவர்கள் பெரட்டாசி தோட்டத்தில் வசிக்கும் சுரேன்ஜித் புஷ்பகுமார் (39 ) மற்றும் ஹெல்போட 7ம் கட்டை தோட்டத்தில் வசிக்கும் விஜயகுமார் கவிஷ்கர் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த பஸ்ஸில் சுமார் 80 பேர் பயணித்துள்ளனர், அதிக எண்ணிக்கையான பயணிகளை ஏற்றிச் சென்றமையே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

சிறு காயங்களுக்குள்ளானவர்கள் ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் புஸல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள், பஸ்ஸை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். பெரட்டாசி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments