Ticker

6/recent/ticker-posts

3 வருடங்களுக்கு அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை…


 எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் அரச சேவை ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ளக்கூடாது என சர்வதேச நாணய நிதியம் (IMF) அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் விசேட கொடுப்பனவும் அதிகரிக்கப்படக்கூடாது என்ற நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இதற்கு முன்பு 30 இலட்சமாக இருந்த வருமான வரி வரம்பை 5 இலட்சமாக குறைக்க நிதி நிதியம் முன்மொழிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments