பெண் அளித்த முறைப்பாடு; காத்தான்குடி நகரசபை உறுப்பினர் கைது.!!!
காத்தான்குடி நகரசபையின் தேசியப்பட்டியல் உறுப்பினர், பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 21 வயதுடைய பெண் ஒருவர், குறித்த நகரசபை உறுப்பினர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இன்று (09) வியாழக்கிழமை குறித்த நகரசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 Comments