Ticker

6/recent/ticker-posts

வவுனியா சமயபுரம் பகுதியில் தனது மனைவி என அறியப்படும் பெண்ணையும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று (2) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் , வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ளவீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு வருகைதந்த உயிரிழந்தநபர் வீட்டில் இருந்த பெண்ணையும் அவரது தாயாரையும் கத்தியால் குத்திகாயப்படுத்தியுள்ளார். தமிழர் பகுதியில் திருமணத்திற்கு புறம்பான உறவால் நேர்ந்த கொடூரம்; சடலமாக மீட்கப்பட்ட குடுபஸ்தர் | Body Found Vavuniya After Attack On Women வீடு தீயிட்டு எரிப்பு அதனைத்தொடர்ந்து வீட்டினை தீயிட்டு கொழுத்திஉள்ளார். இதனால் படுகாயமடைந்த இரு பெண்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் குறித்த குற்றச்செயலை புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குடும்பஸ்தர் வீட்டின் கிணற்றில் வீழ்ந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தமிழர் பகுதியில் திருமணத்திற்கு புறம்பான உறவால் நேர்ந்த கொடூரம்; சடலமாக மீட்கப்பட்ட குடுபஸ்தர் | Body Found Vavuniya After Attack On Women இதேவேளை உயிரிழந்த குடும்பஸ்தரும், காயமடைந்த பெண்ணும் வெவ்வேறு பகுதிகளை சேந்தவர்கள் என கிராமமக்கள் தெரிவித்ததுடன் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக கடந்த ஒரு வருடகாலமாக சமயபுரம் பகுதியில் வசித்துவருவதாக தெரிவிக்கின்றனர். யாழில் கனடா பெண்மணிக்கு நேர்ந்த துயரம் யாழில் கனடா பெண்மணிக்கு நேர்ந்த துயரம் அத்துடன் அவர்கள் இருவரும் ஏற்கனவே வெவ்வேறு திருமணங்களை முடித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது. வவுனியாவில் புதிதாக திறக்கப்பட்ட மசாஜ் நிலையம்; மக்கள் எதிர்ப்பு வவுனியாவில் புதிதாக திறக்கப்பட்ட மசாஜ் நிலையம்; மக்கள் எதிர்ப்பு சம்பவத்தில் 30 வயதான பெண்னும் அவரது தாயாரும் , காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சம்பவத்தில் கிருஸ்ணகுமார் வயது 45 என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



வவுனியா சமயபுரம் பகுதியில் தனது மனைவி என அறியப்படும் பெண்ணையும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று (2) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,

வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ளவீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு வருகைதந்த உயிரிழந்தநபர் வீட்டில் இருந்த பெண்ணையும் அவரது தாயாரையும் கத்தியால் குத்திகாயப்படுத்தியுள்ளார்.

வீடு தீயிட்டு எரிப்பு

அதனைத்தொடர்ந்து வீட்டினை தீயிட்டு கொழுத்திஉள்ளார். இதனால் படுகாயமடைந்த இரு பெண்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த குற்றச்செயலை புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குடும்பஸ்தர் வீட்டின் கிணற்றில் வீழ்ந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இதேவேளை உயிரிழந்த குடும்பஸ்தரும், காயமடைந்த பெண்ணும் வெவ்வேறு பகுதிகளை சேந்தவர்கள் என கிராமமக்கள் தெரிவித்ததுடன் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக கடந்த ஒரு வருடகாலமாக சமயபுரம் பகுதியில் வசித்துவருவதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அவர்கள் இருவரும் ஏற்கனவே வெவ்வேறு திருமணங்களை முடித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.


சம்பவத்தில் 30 வயதான பெண்னும் அவரது தாயாரும் , காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சம்பவத்தில் கிருஸ்ணகுமார் வயது 45 என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments