Ticker

6/recent/ticker-posts

இன்று (05) கடலோர ரயில் பாதையில் ஏற்படவிருந்த பாரிய விபத்தினை மொரட்டுவை


இன்று (05) கடலோர ரயில் பாதையில் ஏற்படவிருந்த பாரிய விபத்தினை மொரட்டுவை, மோதர பகுதியைச் சேர்ந்த சமந்த பெர்னாண்டோ என்ற நபர் விரைந்து செயற்பட்டு, அந்நேரத்தில் வந்து கொண்டிருந்த ரயிலை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தனது உயிரைப் பணயம் வைத்தும் கூட, ஒரு பெரிய பேரழிவைத் தடுத்த சமந்த பெர்னாண்டோவின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், 


மகனின் வீட்டுக்கு அருகில் இருந்தேன். பெண்ணொருவர் ரயில் பாதையை அவதானித்துக் கொண்டிருந்தார். அவர் என்னை அழைத்து தண்டவாளம் உடைந்துள்ளதாக தெரிவித்தார். பின்னர் நான் அங்கு அருகே சென்று பார்த்தேன். அப்போது ரயில் ஒலி எழுப்பிக் கொண்டு வந்துக்கொண்டிருப்பதை அவதானித்தேன். உடனடியாக வீட்டுக்குச் சென்று ஆடையொன்றை எடுத்துக்கொண்டு, ரயில் வரும் போது தண்டவாளத்தின் நடுவே சென்று ரயிலுக்கு ஆடையை காண்பித்து அசைத்துக் காட்டினேன். பின்னர் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த அதிகாரியிடம் தண்டவாளம் உடைந்துள்ளது என்றேன். பின்னர், ரயில்வே திணைக்கள அதிகாரிகள் அங்கு வந்து தண்டவாளத்தை சரிசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments