Ticker

6/recent/ticker-posts

மக்கள் பணத்தை மோசடி செய்யும் நபர்களின் புகைப்படங்களும் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள விசேட கெமரா அமைப்பில் உள்ளடக்கப்படும்.


மக்கள் பணத்தை மோசடி செய்யும் நபர்களின் புகைப்படங்களும் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள விசேட கெமரா அமைப்பில் உள்ளடக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்தார்.


நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நிதி மோசடியின் நிலைமை பாரதூரமானதாக காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


நடுத்தர மக்கள் முதலீடு செய்யும் பணத்தை அதிக அளவில் வசூல் செய்யும் சிறு நிதி நிறுவனங்கள் இவ்வாறு பாரியளவில் பணத்தினை வசூலித்த பின்னர் நாட்டில் இருந்து தப்பிச் செல்லும் நிலைமையை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது

Post a Comment

0 Comments