Ticker

6/recent/ticker-posts

ரஷ்ய தாக்குதலில் உக்ரைனில் உயிரிழந்த 3 இலங்கையர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!


உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மூன்று இலங்கையர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரியான கெப்டன் ரனிஷ் ஹெவகேவின் சடலமே நேற்று (06) மீட்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

உக்ரேனிய வெளிநாட்டுப் படையில் தன்னார்வத் தொண்டராகச் சேர்ந்த ஹெவகே, அதன் முதல் சிறப்புப் படையின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றினார்.

இதேவேளை, உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களில் மேலும் இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இருப்பினும், அவர்கள் இருவரினதும் சடலங்கள் இதுவரை மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது

Post a Comment

0 Comments