Ticker

6/recent/ticker-posts

பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நபர் மூன்று நாட்களுக்குப் பின்னர் வீட்டுக்கு வந்ததால் பரபரப்பு #கம்பளை பிரதேச சம்பவம்.


பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சடலம் புதைக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர், மரணமானவர் அவரது தாயார் மற்றும் உறவினர்களுடன் 
வைத்தியசாலைக்கு வந்து மரண விசாரணை அதிகாரி ஏ.நளின் முன்னிலையில் ஆஜரான சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

லங்காதீப நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த செய்தி பின்வருமாறு.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கம்பளை பேருந்து நிலையத்தில் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அடையாளம் காண முடியாத நிலையில் சடலம் சுமார் இரண்டு மாதங்களாக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.


இதேவேளை, அவரது உறவினர்கள் குழுவொன்றை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதுடன், அவர்கள் உடஹெந்தென்ன, மேரிவில தோட்டத்தின் கீழ் பகுதியில் வசிப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.


அதன்படி, உயிரிழந்தவரின் தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்ட குழுவினர் கம்பளை வைத்தியசாலைக்கு வந்து சடலத்தை அடையாளம் கண்டுள்ளதுடன் உயிரிழந்தவர் தனது 59 வயதுடைய லாசர் மைக்கல் என்ற எனது மகன் எனவும் தாய் தெரிவித்துள்ளார்.


சகோதரர் மற்றும் உறவினர்கள் சடலத்தை அடையாளம் கண்டதையடுத்து, மரண விசாரணை அதிகாரி ஏ . நளின் சடலத்தை கையளித்த உடன் இறந்தவரின் உறவினர் உள்ளிட்ட குழுவினர் சடலத்தை மேரிவில தோட்டப் பகுதிக்கு எடுத்துச் சென்று மத அனுஷ்டானங்களை மேற்கொண்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர் புதைத்துள்ளனர்.

இந்நிலையில் இறந்துவிட்டதாகக் கூறியவர், சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வந்து, “அம்மா நான் வீட்டுக்கு வந்துட்டேன்” என்று கூறிய படி வீட்டுக்குள் வந்தநிலையில், நீ செத்துவிட்டாய்” என்று வீட்டில் உள்ளவர்கள் கூறி சத்தமிட்டு உள்ளனர்.

நீ கம்பளை நகரில் வைத்து செத்து விட்டாய் அதனால் வீட்டில் கொண்டு வந்து புதைத்தோம் என அவருக்கு விளக்கி உள்ளனர்.

அதற்கு அவர் “இல்லை அம்மா நான் கம்பளைக்கு செல்லவில்லை.

நான் நாவலப்பிட்டிக்கு சென்று இருந்தேன் என்று கூறியதால் தாய், சகோதரர் மற்றும் உறவினர்கள் இறந்தவரை அழைத்து கொண்டு மரண விசாரணை அதிகாரியை சந்தித்தனர்.

மரண வீட்டிற்கு சுமார் எழுபதாயிரம் ரூபாய் செலவாகியதாகவும் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சம்பவம் விவரிக்கப்பட்டது.

மரண விசாரணை அதிகாரியின் அறிவித்தலின் அடிப்படையில் கம்பளை பொலிஸார் புதைக்கப்பட்ட நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த லாசர் மைக்கல் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

அதன் பிறகு அவர் தனது குழந்தைகளின் வீடுகளிலும், அந்த வீடுகளுக்கு வெளியேயும் பல்வேறு வேலைகளைச் செய்து வந்தார்.

அண்மைக்காலமாக நாவலப்பிட்டியில் உள்ள தனது மகளின் வீட்டில் தங்கியிருந்த அவர், நாவலப்பிட்டியில் அதிக நேரத்தைக் கழித்ததால், நீண்ட நாட்களாக மகளின் வீட்டுக்குச் செல்லவில்லை.

இறுதியாக, மூன்று மாதங்களுக்கு முன்னர் கம்பளை நகரத்தில் அவரைப் பார்த்ததாகவும் அவரின் சகோதரர் மரண விசாரணை அதிகாரியின் முன்னிலையில் தெரிவித்தார்.


அப்போ இறந்து புதைக்கப்பட்ட நபர் யார் என்ற கோணத்தில் விசாரணை இடம்பெற்று வருகிறது.

Post a Comment

0 Comments