Ticker

6/recent/ticker-posts

அலிஸாஹிர் மெலானா MP ஆனார். வர்த்தமானி வெளியானது.


யர்நீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து பதவியிழந்த முன்னாள் அமைச்சர் #ஹாபிஸ் #நஸீர் அஹமட்டின் பாராளுமன்ற  செய்யது அலி ஸாஹிர் மெளலானாவின் பெயர் பொறிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் #ஏறாவூரிலிருந்து மீண்டும் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பினை அலிஸாஹிர் மெளலானா பெற்றுள்ளார்.



#கொரோனா காலத்தின் போது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட #அநியாயங்களுக்கு எதிராகவும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகவும் உறுதியாக நின்று மிக கடுமையாக குரல் கொடுத்து போராடியவர்களில் செய்யது #அலிஸாஹிர்மெளலானா #முதன்மையானவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்தி்ன் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக கௌரவ செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களது பெயர் விசேட வர்த்தமானி மூலம் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான சத்தியவுரையில் கையொப்பம் இடும் நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்ட உதவித்தேர்தல் ஆனையாளர் சுபியான் முன்னிலையில் மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
11.10.2023


Post a Comment

0 Comments