உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட பண்டாரவளை – தூல்கொல்ல பிரதேச பாடசாலை ஒன்றின் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் வழங்கப்பட்ட உணவே இந்த ஒவ்வாமைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (11) இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
0 Comments