பொலனறுவை- வெலிக்கந்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஏறாவூர் பிரதான வீதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹனீபா அவர்கள் இன்று அதிகாலை 3மணிக்கு கடமை முடிந்து தனது அறைக்கு உறங்கச் சென்றவர் காலை 6 மணிக்கு ஜனாசாவாக மீட்கப்பட்டுள்ளார்-
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..
நீதிபதியின் உத்தரவுக்கு அமைய தற்போது அவரது அறையில் இருந்து ஜனாசா பிரேத பரிசோதனைக்காக பொலனறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது -
கையில் ஒரு பெரிய காயம் காணப்படுவதாகவும் அறை முழுக்க இரத்தம் ஓடி காணப்படுவதுடன் அறையின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதாகவும் தகவல் -ஏதும் திட்டமிட்ட சதியா ?
இறைவன் அறிந்தவன் -
பொலிஸ் தடயவியல் பிரிவினர் துணையுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் ,
இடம்பெறும் பிரேத பரிசோதனையின் போதே மரணத்திற்கான சரியான காரணம் தெரிய வரலாம்-
அல்லாஹ் அந்த சகோதரரை பொருந்திக் கொள்வானாக- இழப்பால் வாடி நிற்கும் உறவுகளுக்கு உள அமைதியை வழங்கிடுவானாக !
பிந்திய தகவலின் படி இது ஒரு கொலையே என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
முஹம்மது அஸ்மி -ஏறாவூர்
30.09.2023
0 Comments