Ticker

6/recent/ticker-posts

பாடசாலையில் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த மாணவி - தீயணைப்பு படையினர் களத்தில் இறங்கி மீட்டனர்.


பாடசாலை ஒன்றில் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த 7 வயதான

சிறுமி சுமார் 30 நிமிடங்களுக்கு மீட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரே அந்த சிறுமியை மீட்டுள்ளனர்.

களுத்துறை கட்டுகுருந்த றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.

பள்ளியின் கழிவறை அமைப்புக்கும் சுவருக்கும் இடையே சிறுமி சிக்கிக் கொண்டதாகவும், களுத்துறை மாநகர தீயணைப்புத் துறையின் அவசர ஆம்புலன்ஸ் வந்து ஸ்பேடர் என்ற அதிநவீன கருவியின் உதவியுடன் இரண்டு சுவர்களைத் தள்ளி காப்பாற்றியதாகவும் தலைமை தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments