Ticker

6/recent/ticker-posts

CCTV -கொழும்பில் நபர் ஒருவரை விரட்டி சென்று சுட்டுக்கொன்ற துப்பாக்கிதாரிகள்.


மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் கொழும்பு கெசல்வத்தை Martis Lane பகுதியில் உள்ள உணவகம் ஒன்றினுள் வைத்து T56 துப்பாக்கியை பயன்படுத்தி நபர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கொழும்பு 12 இல் வசிக்கும் 20 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள தேடப்படும் குற்றவாளியான தனுகவின் கூட்டாளி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்த நபர் உணவகத்தில் சாப்பிட வந்துள்ளார். இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் வண்டியை நிறுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.


இதனால் கலவரமடைந்த நபர் உணவகத்திற்குள் ஓடியுள்ளார்.


அவரைப் பின்தொடர்ந்து ஓடிய துப்பாக்கி தாரி அவரை உள்ளே விரட்டி சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கெசல்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/KuMjVS9PjwsJTd10BMK96T


Post a Comment

0 Comments