கம்பளை எல்பிட்டிய பிரதேசத்தில் 6 நாட்களாக காணாமல் போயிருந்த பாத்திமா முனவ்வரா என்ற யுவதியின் சடலம் இன்று (13) காலை அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலத்தை தோண்டி எடுக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கம்பளையில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்த பாத்திமா முனவ்வரா என்ற யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பணியிடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார்.
இவர் கம்பளை, வெலிகல்ல, எல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய யுவதியாவார்.
பின்னர், அவளைக் கண்டுபிடிக்க விசாரணையைத் தொடங்கிய பொலிஸார், சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைது செய்தனர்.
பின்னர், யுவதியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகவும், அவள் எதிர்த்ததால், அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொன்று புதைத்ததாகவும் பொலிஸாரிடம் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்த தகவலின் அடிப்படையில் பாத்திமா முனவ்வரா புதைக்கப்பட்ட இடத்தை நேற்று (12) அடையாளம் கண்ட பொலிஸார், இன்று காலை சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து அவரது சடலத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉
0 Comments