Ticker

6/recent/ticker-posts

Video -திறப்பை வாகனத்திலேயே வைத்துவிட்டு இறங்கிய சாரதிக்கு நேர்ந்த😱😱


அனுபவம்யகலென்பிந்துனுவெவ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த சம்பவம் நேற்று(18) காலை பதிவாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகனத்தை நிறுத்திய சாரதி உள்ளேயே திறப்பை வைத்துவிட்டு கீழே இறங்கி பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளார். 

அந்த சந்தர்ப்பத்தில் உள்ளேயிருந்த அவரது பிள்ளையின் கை தவறுதலாகப்பட்டு வாகனம் Lock ஆகியுள்ளது. என்ன நடந்தது என்பதை புரிந்துகொண்ட பிள்ளையின் தந்தையான சாரதி வாகனத்தை திறக்க கடும் முயற்சி எடுத்துள்ளார். அத்துடன், அங்கு கூடிய பொதுமக்களும் வாகனத்தை திறப்பதற்கு கடும் சிரத்தை எடுத்துக்கொண்ட போதிலும் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இவ்வாறான சூழலில் மாற்று திறப்பை தேடி வீட்டுக்கு சென்ற சாரதி சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மாற்று திறப்பை எடுத்துவந்து வாகனத்தை திறந்து பிள்ளையை பத்திரமாக மீட்டெடுத்தார். பிள்ளைகள் தொடர்பாக மிகுந்த எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் நாம் செயற்பட வேண்டும் என்பதையே இந்த சம்பவம் நம் அனைவருக்கும் உணர்த்துகின்றது.தினமும் செய்திகளுடன்

தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/KuMjVS9PjwsJTd10BMK96T



Post a Comment

0 Comments