03May2023,
சாய்ந்தமருது, கல்முனைக்குடி (கல்முனை) பிரதேச செயலக ஏல்லைகளை பிரிக்கின்ற, தேசிய மட்டத்தில் பிரபலம் பெற்ற தேசிய பாடசாலைகளான கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி, கல்முனை ஸாஹிறா கல்லூரி அமையப்பெற்றுள்ள ஸாஹிறா கல்லூரி வீதியால் கடந்த காலங்களில் பாடசாலை ஆரம்பம் - முடிவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதனை கவனத்தில் கொண்டு பாடசாலை நிருவாகத்தின் தொடர்ச்சியான முன்னோடுப்புகள் கலந்துரையாடல்களின் பயனாக இப்பிரச்சினையை தீர்க்கும் முகமாக இன்று (03) அதற்கான வீதி தடை நேர நாட்காட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஸாஹிறா கல்லூரி வீதியின் (பிரதான) நூலைவாயில், மஹ்மூத் மகளிர் கல்லூரியின் வலது, இடது புறமாக உள்ள வீதி ஒரங்களினை சேர்த்து மொத்தமாக மூன்று வீதி தடை பலகை நேர நாட்காட்டி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
நேர விபரங்கள்:
திங்கள் - வியாழன் வரை (பாடசாலை ஆரம்ப நேரம்) 7:00AM - 8:00AM வரையும் (பாடசாலை முடிவு நேரம்) 1:30PM - 2:30PM
வரையும் வெள்ளிக்கிழமை (பாடசாலை ஆரம்ப நேரம்) 7:00AM - 8:00AM வரையும் (பாடசாலை முடிவு நேரம்) 11:00AM - 12:00PM வரை. குறித்த வீதி ஒழுங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
மேற் ௯றித்த செயற்பாடுகள் மூலமாக ஏதிர்காலத்தில் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து சீரமங்கள், வாகான சாரதிகள் மற்றும் பொது மக்கள் குறித்த நேரத்தில் எதிர் நோக்குகின்ற இடர்பாடுகளிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.
தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉
0 Comments