Ticker

6/recent/ticker-posts

நீர்வீழ்ச்சிக்கு அருகில் கேம்ப் அடித்து தங்கி இருந்த தம்பதியரை காட்டுயானை தாக்கியதில் யுவதி பரிதாபமாக பலி.

 


கொஸ்லந்த, தியலும நீர்வீழ்ச்சிக்கு அருகில் முகாமிட்டிருந்த தம்பதியரை இன்று (12) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் யுவதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இளைஞன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


மாத்தறை கெகுனதொர பிரதேசத்தில் வசித்து வந்த 23 வயதுடைய ஜி தருஷி என்ற யுவதியே குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நிலையில், வாரியபொல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய கே.ஏ.தனுஷ்க என்பவரே காயமடைந்துள்ளார்.

இவர்கள் கொஸ்லந்தவில் உள்ள தியலும பகுதிக்கு சுற்றுலா சென்று இரவு முகாமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யுவதியை தாக்கிய காட்டு யானை அதே இடத்தில் சுற்றித் திரிந்ததாகவும், குழுவுடன் வந்த அனைவரையும் விரட்டியடித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர், அப்பகுதி மக்களுடன் இணைந்து பொலிஸார் மிகுந்த முயற்சியுடன் யானையை விரட்டினர்.


தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/KuMjVS9PjwsJTd10BMK96T



Post a Comment

0 Comments