Ticker

6/recent/ticker-posts

இளம் மனைவியை கடத்திய கணவன் - சிலாபத்தில் சம்பவம்


திருமணமாகி குடும்பத் தகராறு காரணமாக சுமார் ஒருவருடகாலமாக பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண் மனைவியை பலரது உதவியுடன் அவரது கணவர் கடத்திச் சென்றுள்ளார்.

இச் சம்பவம் சிலாபத்தில் பதிவாகியுள்ளது.

சிலாபம் மனுவங்கமவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்த 18 வயதுடைய பெண் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண்ணின் வீட்டிற்கு விரைந்த அவரது கணவர் மற்றும் ஐந்து பேர் அடங்கிய குழுவினர் வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணை துக்கிச்சென்று வேனில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். 

இதேவேளை, கடத்திச் செல்லும் போது அதனை தடுக்க வந்த பெண்ணின் தாயையும் தாக்கியுள்ளனர்.

குறித்த பெண் சிலாபத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயின்று வந்ததாகவும் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் போது 19 வயதுடைய இளைஞனை காதலித்து பின்னர் அவருடன் தம்புள்ளைப் பிரதேசத்தில் வசித்து வந்ததாகவும் இந்நிலையில், அங்கு கணவரின் தொல்லை தாங்க முடியாமல் குறித்த பெண் அண்மையில் தனது வீடு திரும்பியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த கடத்தல் சம்பவத்தின் போது பெண்ணின் தாய் மாத்திரமே வீட்டில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தினமும் செய்திகளுடன் இணைந்துகொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6

Post a Comment

0 Comments