Ticker

6/recent/ticker-posts

காதலனுக்கு கைவிலங்கு போட்டுவிட்டு, காதலியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் - வேலியே பயிரை மேய்ந்த சம்பவம் பதிவு.


சமனலவெவ குளத்தை பார்வையிட மோட்டார் சைக்கிளில் வந்த காதலனையும் காதலியையும்

பயமுறுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், காதலனை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கைவிலங்கு போட்டு விட்டு காதலியை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ள சம்பவம் இரு நாட்களுக்கு முன்னர் பதிவாகி உள்ளது.

மத்தேகம பிரதேசத்தில் வசிக்கும் காதலி, சமனலவெவ அணையை பார்வையிடுவதற்காக தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

அவர்கள் அணையில் இருந்தபோது, ​​அதன் அருகே வந்த ஒருவர் தான் போலீஸ் அதிகாரி என்ற அடையாள அட்டையைக் காட்டி, போதைப்பொருள் உள்ளதா என்று இருவரையும் சரிபார்க்க வேண்டும் என்று கூறி உள்ளார் .

பின்னர் காதலனுக்கு கைவிலங்கு போட்டுவிட்டு , 18 வயது காதலியை அருகில் உள்ள புதருக்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், செல்போன் மூலம் நிர்வாணமாக வீடியோ எடுக்க முயன்றுள்ளார்.

இந்நிலையில் இனந்தெரியாத நபர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் போன்று வேடமணிந்து சமனலவெவ அணைக்கட்டுக்கு அருகில் சுற்றித் திரிவதாக அநாமதேய தொலைபேசி அழைப்பொன்று சமனலவெவ பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

அதன்படி உடனடியாக அணைக்கட்டுக்கு வந்த பொலிசார், நிர்வாணமாக இருந்த இளம்பெண் ஒருவரையும், கைவிலங்கிடப்பட்டிருந்த இளைஞரையும் மீட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்தனர்.

விசாரணையின் போது, ​​சந்தேக நபர் ஹம்பேகமுவ காவற்துறையில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டார். சந்தேக நபர் சமனலவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஒரு குழந்தைக்கு தந்தை என்பதும் தெரியவந்துள்ளது. வல்லுறவுக்கு உள்ளான பெண்ணும் இளைஞனும் மருத்துவ பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தினமும் செய்திகளுடன் இணைந்துகொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/B7eV2rPN1dd6EKYwiqguf5


Post a Comment

0 Comments