Ticker

6/recent/ticker-posts

வீட்டில் மருந்து வகைகளை தயாரித்து விற்று வந்த நபர் சிக்கினார்.


வீட்டில் மருந்து வகைகளை தயாரித்து விற்று வந்த நபர் சிக்கினார்.

கொழும்பு 15, மோதரவில் உள்ள சட்டவிரோத மருந்து உற்பத்தி நிலையமொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அதன் உரிமையாளரின் வீட்டிலிருந்து மருந்து வகைகள் மற்றும் மருந்து உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிகப்படும் மூலப்பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் உணவு மற்றும் மருந்துகள் பிரிவு தெரிவித்துள்ளது.




குறித்த நபர் வலி நிவாரணி மாத்திரைகளை தயாரித்துள்ளதாகவும், இந்திய மருந்து வகைகளுக்கு நிகரான மருந்துகளை அவர் தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளார்.


Post a Comment

0 Comments