Ticker

6/recent/ticker-posts

நிந்தவூர் மாட்டுப்பளையில் இரு மாட்டு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி...!


நிந்தவூர் மாட்டுப்பளையில் இரு மாட்டு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி...! மாட்டுக் பலத்த காயம்...!!

(எஸ் ஜே புஹாது)

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் சற்று முன்னர் மாட்டு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்

இச்சம்பவம் இன்று 2023.04.15 அதிகாலையில் இடம் பெற்றுள்ளது.

இதுபற்றி தெரிய வருவதாவது, வேளாண்மை விதைப்பு வேலைக்கு தேவையான விதை நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு பயணித்துக் கொண்டிருந்த மாட்டு வண்டிகள் இரண்டுடன் அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது




இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் மோட்டார் சைக்கிளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் ஒரு வண்டிலின் சக்கரம் உடைந்து சேதமடைந்துள்ளதுடன் மற்றுமொரு வண்டியின் மாட்டினது கால்கள் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் எனவும், மாட்டு வண்டிகள் இரண்டும் நிந்தவூரைச் சேர்ந்தது என்றும் தெரியவந்துள்ளது.

தினமும் செய்திகளுடன் இணைந்துகொள்வதற்கு👉 

https://chat.whatsapp.com/B7eV2rPN1dd6EKYwiqguf5

Post a Comment

0 Comments